ஆவியுலக ஆராய்ச்சி என்றாலே நம்முடைய நினைவில் வருவது விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் என்ற பெயர்தான்.

ஆவியுலகத்துறையைத்தமிழர்கள் மத்தியில் பிரபலமடையச் செய்தவர் இவர்தான் எனலாம். 1973 - ஆம் ஆண்டு முதல் ஆவியுலக ஆராய்ச்சில் ஈடுபட்டு வருகிறார்.

ஆவிகளைப்பற்றிய நம்பிக்கை நம்மிடம் ஆழமாக இருந்தாலும் கூட நம் நாட்டில் ஆன்மநல ஆய்வுகள் அளவு கடந்து இருந்தாலும் கூட அறிவியல் ரீதியாக ஆராய்ந்து காட்டப் பலர் ஏனோ முன் வரவில்லை. பய உணர்வு இதற்குக் காரணமாக இருக்கலாம்.

இப்படிப்பட்ட நிலையில் ஆவிகளைப்பற்றியே உண்மைகளை விக்கிரவாண்டி ரவிச்சந்திரன் ஆராய்ந்து அறிந்து சிந்தித்து அருமையாகப்பல நூல்களை வரிசையாக எழுதி வருகிறார்.

ஆவியுலக ஆராய்ச்சி மையம் என்ற அமைப்பின் மூலம் தன்னைத்தொடர்பு கொள்பவர்களுக்கு நேரில் அவரவர் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை ஆவிகளிடம் கேட்டுத் தெரிவித்து வருகிறார்.

ஆவிகள் உலகம் என்கின்ற மாத இதழ் ஆசிரியராகவும் செயல்படுகிறார்.

எண்ணற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலமும், வானொலி பேட்டிகள் மூலமும் பத்திரிக்கை பேட்டிகள் மூலமும் ஆவிகளின் உண்மைத்தன்மையை வலியுறுத்தி வருகிறார்.

ஆவிகள் உலகம் என்னும் இணையதளத் தொலைக்காட்சியை உருவாக்கி அதன் மூலமும் ஆவியுலக ரகசியங்களை எடுத்துரைக்கிறார்.

தனது சொந்த ஆராய்ச்சியுடன் ஆவியுலகத்துறையில் வெளிவந்துள்ள ஏராளமான தமிழ் ஆங்கில நூல்களையும் படித்து ஆவியுலகத்துறையில் நல்ல தெளிவோடு சிறந்து விளங்குகிறார்

நற்சான்றிதழ்

எமது ஆவிகள் உலகம் இணையதள தொலைக்காட்சியைக்காண..

இதை க்ளிக் செய்யவும்